• Latest articles
மார்ச் 03, 2020
ஈடுபடுங்கள் மார்ச் 03, 2020

இரண்டு நாள் நீடிக்கும் ஒரு சுற்றுலா ஏற்பாடாகி இருந்தது. காலையில் எல்லாரும் பேருந்தில் ஏறியவண்ணம் இருந்தனர். இதற்கிடையில் எல்லாருடைய கண்களும் ஒரு பெண்மணியைச் சுற்றியே சுழன்றன. அவர் இரண்டு ஊன்றுகோல்களுடன் வந்திருந்தார். கால்களால் வேகத்தில் நடக்க முடியவில்லை. அவருக்கு உதவியாகக் கணவனும் வந்திருந்தார். அவர் ஒருவழியாகப் பேருந்தில் ஏறி அமர்ந்தார். அமர்ந்த கையோடு புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். இதைக்கண்ட பிறர் அவரை ஏளனமாக நோக்கினர். சிலர், இந்த வயதில் என்ன போட்டோ வேண்டிக் கிடக்கிறது என்றனர். மற்று சிலர், இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படியரு பயணம் தேவையா? என நகைத்தனர். சிலர் நேரடியாகவே அவரிடம் கேட்டனர்: என்ன, காலுக்குப் பிரச்சனையா? அவர் அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: “எலும்புப் புற்றுநோய் வந்தது. ஓர் அறுவை சிகிச்சையும் முடிந்தது. இனியும் ஒருசில அறுவை சிகிச்சைகள் பாக்கியுள்ளன. ஆபத்தும் இல்லாமல் இல்லை. இப்போது வலி கொஞ்சம் குறைவு. அடுத்த அறுவை சிகிச்சைக்கு முன் காண வேண்டிய இடங்களை ஓரளவு கண்டு முடிப்பதே லட்சியம்..!” பிறகு யாரும் அவரிடம் கேள்வி கேட்கவில்லை.

டயஸ் போள் மஞ்ஞளி

'

By: Shalom Tidings

More
ஜன 28, 2020
ஈடுபடுங்கள் ஜன 28, 2020

டுமுறை நாட்களில் ஒவ்வொருவரும் செய்தவற்றை எழுதுமாறு மறைக்கல்வி ஆசிரியர் மாணவர்களைப் பணித்தார். அதற்காகப் பத்து நிமிடங்களை ஒதுக்கிய ஆசிரியர், சிறந்த பதிலுக்குப் பரிசும் வாக்களித்தார்.விடுமுறை நாட்கள் தொடங்கிய நாள் முதல் உறவினர்களின் வீட்டாருடன் வீகாலான்றுக்குப் போனது, போன்ற காரியங்களைப் பட்டியலிலõலிட்டு எழுதினான் வரதன். வேறு யாரும் வீகாலான்றுக்குப் போயிருக்கமாட்டார்கள் என்ற இறுமாப்பும் அவனுக்கு இருந்தது. அப்பா அம்மாவுடன் வயல்வெளியில் வேலை செய்த காரியங்களே பிரியனுக்கு எழுத இருந்த ஒரே காரியம். கார்ட்டூண் படங்களைப் பார்த் ததும் புதிய வீடியோ விளையாட்டுகள் வாங்கியதும் நிவேதிதன் குறித்த போது புதியதொரு சைக்கிள் வாங்கி ஓட்டிப்பார்த்ததை எழுதினான் கவுசிக். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்று எழுதி, காகிதத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஆனால் எந்த அவசரமும் காட்டாமல் வெகு நிதானமாக ஒவ்வொன்றும் யோசித்து யோசித்து எழுதிக்கொண்டிருந்த இன் னொரு மாணவனும் அவ்வகுப்பில் இருந்தான். அவன் பெயர் செல்வா. அவனை ஆசிரியர் கவனித்தார். அவன் பொதுவாகவே சாந்தமானவன். நன்றாகப் படிப்பவன். அவன் தனது விடைத்தாளைக் கடைசியில்தான் கொடுத்தான். ஒன்றோ இரண்டோ காரியங்களைத் தான் பலரும் எழுதியிருந்தனர். விடைத்தாள்களைப் பார்த்த ஆசிரியர் மாணவர்களிடம் கூறியது:

“”கிட்டத்தட்ட நீங்கள் எல்லாருமே ஒரே விதமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனா லும் ஒருத்தர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா எழுதியிருக்கார். அதை நான் வாசிக்கிறேன்; கேளுங்கள்: அவர் செல்வாவின் விடையை வாசித்தார். “ஒவ்வொரு நாளும் தம்பியுடன் கோவிலுக்குச் சென்றேன். என் தாய்க்குக் கூடமாட உதவி னேன். குடிநீர் பிடித்து வர அம்மாவுடன் சிலதூரம் சென்றேன். பெற்றோருடன் உறவினர் வீடுகளுக்கும் சென்று வந்தேன். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரித்தேன். பழைய நோட்டுப் புத்தகங்களில் எழுத்துக்களை எழுதிப்படிக்க என் தங்கைக்கு உதவினேன். பக்கத்து வீட்டு அக்காளிடமிருந்து வண்ணக் காகிதங்களால் பூக்களை உருவாக்கும் கலையையும் கற்றுக் கொண்டேன்….’

படித்து முடித்தபின் ஆசிரியர் செல்வாவைத் தம் அருகே கூப்பிட்டார். பிறகு செல்வாவைச் சுட்டிக் காட்டி அனைவருக்குமாக அவர் இப்படிக் கூறி னார். “”மாணவர்களே, விடுமுறைக்காலம் என்பது பொழுதுபோக்குகளுக்கான காலம்தான். ஆற்றிலே நீச்சலடிப்பதும் மலையேறச் செல்வதும் தேவைதான். ஆனால் முழுநேரமும் அப்படியே செலவிட்டுவிடக்கூடாது. பெற்றோருக்கு உதவ வேண்டும். புதிய காரியங்கள் படிக்க வேண்டும். புதியவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எனவே, இன்றைய கேள்விக்கு சிறந்த விடை எழுதிய செல்வாவுக்குத்தான் முதல் பரிசு’. எல்லாருக்கும் அது பிடித்துப் போனது. ஆசிரியர் ஒரு பொட்டலம் நிறைய மிட்டாய்களைச் செல்வாவுக்கு வழங்கி அவனைப் பாராட்டினார். செல்வா அந்த மிட்டாய்களை அங்கிருந்த அத்தனை பேருக்கும் கொடுத்துத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டான்.

'

By: Shalom Tidings

More
ஜன 28, 2020
ஈடுபடுங்கள் ஜன 28, 2020

மன்னவா நீ உன் ஆட்சியதிகாரங்களை எந்த அளவுக்கு விரும்புகிறாயோ அந்த அளவுக்கு நானும் கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை ஏற்க விரும்புகின்றேன். உனக்கு உனது உயிர் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு ஒருபோதும் இறவாத அரசராம் கடவுளுக்காக மரிப்பதே எனக்குப் பிடிக்கும். நீ உனது மணிமகுடத்தை நேசிப்பது போல் நான் என்னைப் பிணித்திருக்கும் இச்சங்கிலிலõலிகளை மனதார நேசிக்கிறேன். தம்மைச் சங்கிலிலõலிகளால் கட்டி சாலையின் மருங்குகளில் இழுத்துச் சென்று இழிவுபடுத்த விரும்பிய கொடுங்கோல் மன்னனிடம் அந்தியோக்கியாவின் ஆயராக இருந்த பாபிலாஸ் நம்பிக்கையுடன் கூறிய கூற்றுகளே மேற்படி கூற்றுகள்!

உண்மைக் கடவுளை நம்பாத மன்னன், இறைவனின் கோவிலிலõலில் வேற்றுத் தெய்வங்களை வைத்து வழிபடும் பொருட்டு ஆண்டவருடைய ஆலயத்திற்குள்ளே நுழைய முயன்றான். ஆனால் இதைக் காண சகியாத ஆயர் பாபிலாஸ் சர்வ வலிலõலிமையும் பயன்படுத்தி அவனைத் தடுத்தார். தமது கடமையை செய்த ஆயரை மன்னன் சிறையிலடைத்துத் தண்டித்தான். பிறகு அவன் தனது வழிபடு மூர்த்திகளைக் கைதொழுமாறு கட்டளையிட்டான். ஆனால், ஆயரை அவரது நம்பிக்கையிலிலõலிருந்து கிஞ்சித்தும் வேறுபடுத்த முடியாது என்பதை அறிந்த மன்னன், அவரைச் சங்கிலõலிலியால் கட்டி ஊர்ஊராக இழுத்துச் சென்று இழிவுபடுத்த ஆணையிட்டான்.

ஆயரோடு தங்கியிருந்த வேறு மூன்று இளைஞர்களையும் அவர்களுடைய அன்னையரையும் படைவீரர்கள் கைது செய்து மன்னனிடம் ஒப்படைத்தனர். அவர்களுடைய விசுவாசத்தையும் சோதித்துவிடுமாறு ஆயர் அரசனுக்கு சவால் விடுத்தார். ஏனெனில் அவர்களும் தங்கள் விசுவாசத் தைக் கைவிடமாட்டார்கள் என்பதை ஆயர் நன்றா க அறிந்துவைத்திருந்தார். எனவே, எவருடைய விசுவாசத்திற்கும் ஊறு விளைவிக்க முடியாது என்பதை உறுதி செய்த மன்னன் ஆயர் உள்ளிட்ட அனைவரையும் வாளுக்கு இரையாக்கினான்.

கி.பி. 237 முதல் 253 வரை அந்தியோக்கியாவின் ஆயராக இருந்த பாபிலாசின் திருநாளை ஜனவரி 24þஆம் நாள் திருச்சபை கொண்டாடிவருகிறது.

'

By: Ranjith Lawrence

More
ஜன 28, 2020
ஈடுபடுங்கள் ஜன 28, 2020

“”அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென் றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கிவந்தபோது இறந்த ஒருவரைச் சிலர் தூக்கிவந்த னர். தாய்க்கு அவர் ஒரே மகன். அத்தாயோ கைம் பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர் அவர்மீது பரிவுகொண்டு “அழாதீர்’ என்றார்” (லூக். 7:11þ13).

கைம்பெண் என்பவள் ஒரு சிறகொடிந்த பறவை. ஒன்றாகவே சிந்தித்து, ஒன்றாகவே வேலை செய்து, ஒன்றாகவே உண்டுறங்கி, ஒன்றாகவே சிறகடிக்கும் கனவுகள் தம்பதிகளுக்கே சொந்தம். ஆனால் கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவனும் ஒற்றைச் சிறகுள்ள பட்சிக்கு ஒப்பாவர். இன்று முதல் நீங்கள் இருவரும் ஓருயிரும் ஈருடலுமாய் இருக்கிறீர்கள் என்னும் வாழ்த்தில் வதியும் வலிலõமை எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்பதை இருவரில் ஒருவர் உதிரும் போதே தெரியவரும். விவிலிலõயத்தில் நாம் சந்திக்கும் கைம்பெண் தன் உயிரை இப்போதும் தக்க வைத்திருப்பது தன் ஒரே மகனுக்காக மட்டுமே. அம்மகனும் போய்ச் சிறகொடிந்தவள் போல் ஆனாள். ஆறுதலுக்கு ஒரு வார்த்தை இல்லாத பெருங்கூட்டம் அவளோடு நடக்கிறது. இந்நிலையில் அவளைக் கண்ட ஆண்டவர் அவளிடம் பரிவுகொண்டு “அழாதீர்’ என்றார். இவ்வாறு உலகிற்கே ஆறுதலாக விளங்கும் ஆண்டவரை நாம் இவ்வுலகிற்கு எடுத்துக்கூற வேண்டாமா?

“அழாதீர்’ எனச் சொல்லõலி விட்டு அசட்டையாகச் செல்ப வர் அல்ல நம் ஆண்டவர். அவர் முன்னால் சென்று பாடையைத் தொட்டார். பிறகு இறந்து கிடந்தவனை நோக்கி “எழுந்திடு’ என்கிறார். ஒருவேளை ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லõலி விட்டு அலட்சியமாகப் போகிறவர்களாக இதுவரை நாம் இருந்திருக்கலாம். இனி நாம் அப்படி இருத்தலாகாது. அழுகைக்குப் பின்னால் மறைந் திருக்கும் காரணத்தை அறிந்து அதற்குத் தீர்வு காண முடிந்தால் மிகவும் நல்லது. ஏனெனில், முன்னோக்கி வந்து பாடையைத் தொட்டு நிறுத்தி அதற்குள் இருக்கும் சடலங்களுக்கு உயிர் தந்து உரியவர்களிடம் ஒப்படைக் க வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம்தான் விடப்பட்டுள்ளது. இதற்குப் பெயர்தான் கருணை. தங்கள் வாழ்க்கைகளில் செத்துப் போய் சலனமற்றிருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குப் புதுவாழ்வு கொடுங்கள். இந்தப் பாடையும் பாடைக்குப் பின்னால் கைம்பெண்ணும் நமது வீடுகளிலும் வீட்டுப்புறங்களிலும் ஏன் உலகம் முழுவதிலும் பரவலாக உண்டு என்பதை யாரும் மறக்காதீர்கள்.

இது நம்மால் முடிகிற கதையா?

நன்மை செய்வதற்கான ஓர் உந்துதல் உதிக்கும் போதே இயலாமைகளின் பற்பல பல்லிலõலிளிப்புகள் வெளியே துருத்தத் தொடங்கும். 1 அரசர் 17:17 முதலான வாக்கியங்களில் எலிலõலியா இறைவாக்கினர் இறந்துபோன ஒரு குழந்தைக்குப் புத்துயிர் தரும் ஓர் அதிசயத்தை வாசிக்கிறோம். 2 அரசர் 4:32 முதலான பகுதியில் இன்னொரு உயிர்ப்பித்தலும் ஒப்படைப்பும் இருப்பதைக் காண்கிறோம்.

யார் இந்த எலிலõலியா? “”அவர் நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தான். அவர் மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார். மூன்று ஆண்டு ஆறுமாதம் மழை இல்லாமல் போயிற்று” (யாக். 5:17). எலõலிலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர் என்பதை இறைவார்தை எவ்வளவு தெளிவாகச் சொல்கிறது எனப் பாருங்கள். எனினும் தேவைகளில் உழல் வோரைப் பார்க்கும் போது நம் உள்ளங்கள் உருகுகின்ற னவா?

ஆகையால் நாம் நமக்கிருக்கும் காயங்களையும் குறைகளையும் பொருட்படுத்தாமல் பிறருடைய காயங்களைக் கட்டி மருந்திட முன்வருவோம். கருணையின் ஜெபமாலையைத் தவறாமல் சொல்வோம். கருணையின் ஒரு சிறிய செயலையாவது அன்றாடம் மறக்காமல் செய்வோம். “”உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” (லூக். 6:36). இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” (மத். 5:7)

ஆண்டவரே, உமது கருணையின் முகத்தை நான் உலகினர்க்கு வெளிப்படுத்த நீர் உமது கனிவார்ந்த பார்வையை என்பால் திருப்பியருளும். ஆமேன்.

'

By: Sister Mary Mathew

More
ஜன 28, 2020
ஈடுபடுங்கள் ஜன 28, 2020

தியான நிகழ்ச்சியின் போது ஒரு தாய் தன் பையனுடன் ஜெபிக்க வந்தாள். அவன் பிறப் பிலேயே உடல் அங்கங்கள் அத்தனையும் தளர்ந்து போன சிறுவன். வயது பதினாறு. அவனது முகம் தேவதூதனின் முகம் போல் மின்னியது. நான் அவனுக்காக ஜெபித்தேன். பிறகு அத்தாயின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தேன். அப்போது அவள் அழுதுகொண்டிருந்தாள். தழுதழுத்த குரலõலில் அவள் சொன்னாள்: “”சுவாமி, ஒரு புண்ணியவாளனுக்குப் பிறப் பளித்த புனிதவதி நான்! கடவுளிடம் எனக்கு எந்த முறையீடும் குறைபாடும் இல்லை”. ஊனமுற்ற ஒரு தாயின் கதறல் கள் என் மனச்சான்றைக் குத்துவதாய் இருந்தது.

இப்பூமியில் மனிதனாய் பிறந்த யாருக்குமே துன்பங்கள் உண்டு. விபத்துகள், வியாதிகள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பல்வேறு உபாதைகள் அவ்வப்போது நம்மை பதம்பார்க்கத்தான் செய்கின்றன. ஏன் இப்படி நடக்கிறது? நல்லவர்கள் கூட துன்பங்களுக்குத் தப்புவதில்லையே!

“”என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள். இழிவு வரும்போது பொறுமையாய் இரு. நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது. ஏற்புடைய மனிதர் மானக்கேடு என்னும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகி றார். துன்பமென்னும் உலையில் ஆண்டவர் தம் அன்பர்களைச் சோதிக்கிறார். ஆண்டவர் யாரை நேசிக்கிறாரோ அவரை இன்னும் அதிகமாய் நேசிக்கிறார். பொன் நெருப்பினால் புடமிட்டுச் சோதிப்பதைப் போல் ஆண்டவர் தம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களைப் புடமிட்டு சொந்த மாக்குகிறார்.

துன்புறும் மனிதர்கள் ஆண்டவருக்குக் கண்மணிகள் போல்வர். “”என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றி னத்தாரைக் குறித்து உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான் என்கிறார்” (செக். 2:8). கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளுக் கடியில் பாதுகாப்பதைப் போல் கடவுளும் தம் அன்பர்களைத் தம் சிறகடியில் பாதுகாக்கிறார்.

உனது கவலைகளில் உன் னோடு இருக்கிறவர், உன்னை தம் கைகளில் தாங்குகின்றவர் உனது வலிலõகளின் போது உன்னைக் கைவிட மாட்டார்.

என் மனம் சோர்ந்து போகலாம். என் உடல் தளர்ந்து போகலாம். அப்போதும் கூட ஆண்டவரே என் வலிலõமையாய் இருக்கிறார். உண்மையில் வலிலõகளே நமது வலிலõமை. அதுவே நம்மைக் கடவுளோடு இணைக்கிறது. ஆகவே துன்பங்களை முன்னிட்டு நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும். “”இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்” (உரோ. 8:18).

ஆகவே, துன்பங்களைப் பற்றிய நமது மனப்பான்மைகள் முற்றிலும் மாற வேண்டும். இறைமகன் மனிதராக இம்மண்ணில் பிறந்த போது அவரும்கூட துன்பங்களுக்குத் தப்பவில்லை. அவர் பட்ட அகோரப் பாடுகளைப் பார்த்தால் நம் பாடுகள் எம்மாத்திரம்? உண்மையில் நாம் தியானிக்க வேண்டியது இப்போதைய துன்பங்களை அல்ல; மாறாக வரப்போகும் மாட்சியைத்தான். இறைமகனின் பங்காளிகளாக விரும்புவோர் அவர் சென்ற அதேவழியில் செல்லதான் வேண்டும். அவர் துன்பம், சிலுவை, மரணம் போன்ற ஒடுக்கமான வழிகளினூடே நடந்து சென்றார். மரணம் வரும்வரை அவர் தம் உடலை அதற்காகக் கையளித்தார். அவர் பட்ட பாடுகளால் நாம் மீட்படைந்தோம். ஆகவே நமது துன்பங்களுக்கும் அர்த் தம் உண்டு. இயேசுவோடு சேர்ந்து நாமும் சகிப்போம். அவரது சிலுவையைக் கட்டிப் புணர்வோம். சிலுவையில் அறையுண்டவரின் காயங்களை எண்ணிப் பார்ப்போம். “”கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேது. 4:13)

'

By: Shalom Tidings

More
ஜன 28, 2020
ஈடுபடுங்கள் ஜன 28, 2020

வங்கி ஊழியராகிய எனக்கு புதிய கிளைமேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. புதிய கிளைக்குச் செல்ல நாள் பார்த்திருக்கும் சமயத்தில் மேலிடத்திலிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “”புதிய கிளைப் பொறுப்பை எடுத்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை; மது அருந்திப் பணிக்கு வரும் தோமஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஊழியர் மேலதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு தமது குடியை நிறுத்திக் கொள்ளாத காரணத்தால் மருத்துவர் அல்லது போலீசாரிடமிருந்து சான்றொப்பம் பெற்ற ஓர் அறிக்கையைத் தலைமை அலுவலகத்தில் தொலைநகல் செய்திட வேண்டும். அவருக்கான இடைநீக்க உத்தரவு தொலைநகல் (ஊஹஷ்) செய்யப்படும். அதை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். பிறகு விசாரணையைத் துரிதப்படுத்தி அவரைப் பதவிநீக்கம் செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சொல்லõலிய வேகத்தில் அவர் தொலைபேசியை வைத்துவிட்டார்.

என் மகிழ்ச்சி காணாமற்போயிற்று. புதிய கிளையில் முதல் வேலையே ஒருவரை வேலையை விட்டுத் தூக்குவதா? உறங்க முடியாமல் புரண்டுக்கொண்டிருந்தேன்.

அந்த நாள் வந்தது. குறித்த நேரத்தில் நான் கிளை அலுவலகத்தை அடைந்தேன். புதிய கிளையின் ஊழியர்களுக்கு என்னை நான் அறிமுகம் செய்துவைத்தேன். பிறகு அங்குள்ள ஊழியர்களைப் பழக் கப்பட்டேன். தோமஸ் என்பவர் அவர்களோடு இல்லை. பதிவேட்டில் அவர் ஒப்பமிடவும் இல்லை. சற்றே எனக்கு ஆறுதல். முதல்நாளில் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. புதிய கிளை சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இயங்கியது. கிறிஸ்தவ நிறுவனங்கள் ஏராளமாக இருக்கும் இடமாகையால் அருட்தந்தையர்களும் அருட்கன்னியர்களும் பரவலாகப் புழங்கும் ஒரு கிளையாக அது இருந்தது.

மதிய உணவுக்குப் பின் நான் என் சிற்றறையில் வந்து உட்கார்ந்தேன். அப்போது கிளையின் ஊழியர்ப்பிரதிநிதி என்னைப் பார்த்துப் பேச வந்தார். இந்தக் கிளையில் சிற்சில பிரச்சனைகள் உண்டென்பதை எனக்கு உணர்த்தினார்.

ஆமாம். பிரச்சனைக்குரிய நபர் இன்று வரவில்லைதானே என்றேன். இல்லை. அவர் வந்திருக்கிறார். பொதுவாகவே மதியம் வரை அவர் மயக்கத்தில் இருப்பார். இன்று சிறிது நேரத்தில் உங்களைக் காணவருவார். அவரது பீடிகை எனக்குப் புரிந்தது.

நான் எதிர்பார்த்தபடியே “அந்நபர்’ என் சிற்றறைக்கே வந்துவிட்டார். “”உங்களைப் பழக வந்தேன்” என்றார். நடத்தையில் சற்று முரட்டுக்குணம் வெளிப்பட்டது.

“தோமஸ் சற்றே உட்காருங்கள்; இன்று நீங்கள் பணியில் இல்லை; எனவே, பதிவேட்டில் ஒப்பமிடவும் வேண்டியதில்லை. இன்றைய விடுப்பை முன்கூட்டியே அறிவிக்காததற்கு விளக்கம் தர வேண்டும். நாளையும் இப்படியே தொடர்ந்தால் வங்கிப்பணி முயற்கொம்பாக மாறலாம்”. நான் சற்று கடுமையாகவே சொன் னேன். திருந்த நினைத்தால் அவகாசம் உண்டு எனக்கூறி முடித்தேன்.

கதை திரும்புகிறது

மறுநாள் தமக்கு விடுப்பு வேண்டுமென தொலைபேசியிலேயே சொல்லிலõவிட்டார் தோமஸ். கொஞ்சம் கழித்து இன்னொரு ஊழியருக்கு ஓர் அழைப்பு: “தோமசினுடைய மனைவியும் மக்களும் இரயில் தண்டவாளத்தில் நடந்துபோகிறார்கள்” என்ற தகவல் எதிர்முனையிலிலõருந்து வந்தது. ஏதோ விபரீதம் நடப்பது போல் எனக்குத் தோன்றியது. ஊழியர்கள் இருவரை உடனடியாக ஒரு காரில் ஏற்றி நிலைமையை விசாரித்து வருமாறு அனுப்பி வைத்தேன். திரும்பி வந்த அவர்கள், “இன்னும் கொஞ்சம் பிந்தியிருந்தால் நிலைமை மோசமாகப் போயிருக்கும்’ என்றனர்.

மறுநாள் தோமஸ் என் சிற்றறைக்கு வந்தார். நான் அவரை அமரும்படிக் கேட்டுக் கொண்டேன். உண்மையில் உங்களுக்கு என்ன பிரச்சனை என அன்புடன் விசாரித்தேன்.

“”எனக்கு நான்கு பசங்கள். மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும். மனைவிக்கு வேலை எதுவும் இல்லை. வெறும் கடைநிலை ஊழியராய் வேலை பார்க்கும் எனது சம்பளத்தில் தான் வீட்டுச் செலவும், பிள்ளைகளுடைய படிப்பும் நடந்துபோக வேண்டும். கடன்பட்டுத்தான் வாழ்க்கையை உருட்ட வேண்டியிருக்கிறது. இதனால் வட்டிக்காரர்கள் தொந்தரவுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. மன உளைச்சல் அதிகரித்த காரணத்தால் மதுவுக்கு அடிமை யானேன். இதனால் வெளியே தலை காட்ட முடியவில்லை. இப்போது கடனாளியாக மாறிவிட்டேன்”. தோமசின் விம்மலைக் கண்டு வருந்திய நான் “இனி எவ்வளவு கடன் இருக்கிறது? எனக் கேட்டேன்.

முப்பதாயிரம் ரூபாய் என்றார் வெகு பவ்யமாக! இவ்வளவு தொகையும் கிடைக்குமானால் கடனை அடைத்துவிட்டு மது அருந்துவதை நிறுத்தலாமா? என வினவினேன். “கண்டிப்பாக’ என்றார் தோமஸ். “நம்பலாமா?’ என மீண்டும் கேட்டேன். நான் வாக்கு மாறக்கூடியவன் அல்ல என்றார் அவர்.

என் உள்ளத்தில் எதிர்நோக்கின் ஒரு வெளிச்சக் கீற்று மின்னி மறைந்தது. உடனே ஊழியர்ப் பிரதிநிதியை என் சிற்றறைக்கு வருமாறு அழைத் தேன். தோமசின் கஷ்டத்தில் நாம் கைகொடுத்தாக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என அவரிடம் வினவினேன். நாம் எல்லாரும் இணைந்து நமது சம்பளத்திலிலõருந்து முப்பதாயிரம் ரூபாய் சேர்ப்பதென்றும், தோமசின் கடனாளிகளை நம் கிளைக்கே வரவைத்து பணத்தைக்கொடுக்கலாமென்றும், பிறகு தோமசின் சம்பளத்திலிலõருந்து அதை ஈடுகட்டலா மென்றும் நான் ஒரு யோசனையை வைத்தேன். என் யோசனை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.

இவ்வாறு தோமசின் கடன் முழுவதும் மீட்டி முடிக்கப்பட்டது. அன்றிலிலõருந்து தோமஸ் மது அருந்தவில்லை; ஒழுங்கீனமாக நடந்து கொண்டதுமில்லை.

இது இங்ஙனமிருக்க மேலிடத்திலிடமிருந்து எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது. உங்களிடம் ஒப்படைத்த காரியம் என்னவாயிற்று? அறிக்கையை இதுவரைத் தாக்கல் செய்யவில்லையே? மேலதிகாரியின் அதட்டல் எனக்கு நெருடலாகத் தெரிந்தது.

தோமசின் தற்போதைய நடத்தையை அவரிடம் எடுத்துச் சொன்னேன். அதற்கு அவர், இப்படித்தான் பலரும் அவரைத் திருத்தப் பார்த்து தோல்வியடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு திருத்தல் முயற்சி தேவையா? என வினவினார்.

மேலும் அவர் மேலிடத்தின் அதிருப்திக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். சொன்னதைச் செய் யுங்கள் எனக்கூறி பேச்சை முடித்தார்.

வாழ்க்கையில் புதுவசந்தம்

அன்றிலிலõருந்து நான் தோமசுக்கு சில புதிய பொறுப்புகளையும் கொடுத் தேன். என்னைப் பார்க்க வரும் பயனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதே அப்புதிய பொறுப்புகளில் ஒன்று. அந்தப் பொறுப்பு தோமசுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும் ஏற்பட்டது.

ஒருநாள் நான் தோமசினுடைய வீட்டிற்குச் சென்றேன். மூன்று ஆண் பசங்களும் ஒரு பெண்ணும் ஒலிலõவங்கன்றுகள் போல் ஓடியாடித் திரிவதைக் கண்டு மகிழ்ந்தேன். தோமஸ் இப்போது மானமுள்ள மகராசன். குடும்ப மாகச் சேர்ந்து எல்லாரும் கோயிலுக்கு சென்று வருகி றார்கள். ஜெப ஊழியத்திலும் ஆர்வம் செலுத்திவருகின்றனர். பசங்களிடம் பேசினேன். ஒருவன் குருவாகப் போகவேண்டுமென்று சொன்னான். இன்னொருவன் சட்டம் படிப்பதாக இருந்தான். இளையவன் வர்த்தகத்தில் கால்பதிப்பதாக ஆசை. குருமடத்தின் வங்கிக்கணக்கு எங்கள் கிளையில்தான் இருந்தது. எனவே குருமட அதிபரிடம் பேசினேன். ஒருவனைக் குருமடத்தில் சேர்த்துக்கொள்வதாகவும் இன் னொருவனுக்குக் குருமடத்தில் ஒரு வேலைகொடுப்பதாகவும் அவர் கூறினார். வேலையுடன் சட்டம் படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் ஒப்புக்கொண்டார். தோமசின் குடும்பத்திற்கு இது மிகப்பெரும் ஆறுதல்.

ஆண்டுகள் உருண்டோடின. எனக்கும் பதவிஉயர்வு கிடைத்தது. இடமாற்றமும் கூடவே வந்தது. ஒருநாள் ஒரு வாட்டசாட்ட இளைஞன் என்னைப் பார்க்க வந்தான். அவன் தோமசின் மூத்த மகன். சவுதி அரேபியாவில் வேலை. அவன் படித்த சட்டம் அவனுக்குக் கைகொடுத்தது. அவன் தம்பி குருமடப்படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தான். பெற்றோர் சேமமாகவும் சுபிட்சமாகவும் இருக்கின்ற னர். தங்கையின் திருமணத்திற்கு என்னை அழைக்க வந்திருக்கி றான். அவ்விளைஞனின் மலர்ந்த முகத்தையும் ஒளிர்ந்த கண்களையும் கண்ட போது என் மனம் இவ்வாறு சிந்தித்தது.

கடவுள் நமக்குத் தரும் வாய்ப்புகள் ஏராளம். நமது கனிந்த பார்வையும் அரவணைப்பும் பலரது வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கிரியா ஊக்கிகளாக மாறட்டும். ஒருவரது வாழ்க்கையைச் சிதைத்து விடுவது எளிது. ஆனால் கட்டி எழுப்புவது அவ்வளவு எளிதாக இருக்க முடியாது. இதுவல்லவோ நமது வருங்கால சேமிப்பாக இருக்க முடியும்!

'

By: David

More
ஜன 24, 2020
ஈடுபடுங்கள் ஜன 24, 2020

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கத் துறைமுகங்களையும் கப்பல்களையும் தகர்ப்பதற்காகத் தலைமையேற்றுப் படைநடத்திய ஜப்பான் இராணுவத் தளபதி “பிட்ஸ்மோ பூஷிதா’ அமெரிக்காவை வென்று மக்களின் மனங்கவர்ந்த தலைவராய் மாறினார். எங்கிருந்தும் அவருக்குப் பராட்டுகள் வந்து குவிந்தன. ஏனென்றால் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாட்டுக்குள் அஞ்சாமல் சென்று குண்டு மழை பொழிய அவர் துணிச்சல் காட்டினார். ஆனால் பிட்ஸ்மோவின் வாழ்க்கையோ ஒரு மாபெரும் ஏமாற்றமாய் மிஞ்சியது. வாழ்க்கைக்கு எந்தப் பொருளும் இல்லை என அலுத்துக்கொண்டார்.

ஜேக்கப் டி. ஷேட்சர் என்னும் அமெரிக்க விமானி போர்க்கைதியாகப் பிடிக்கப்பட்டு ஜப்பானிய சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறைக்குள் அன்னபா னம் ஏதும் உண்ணாமல் மனநலம் குன்றிய ஒருவரைப் போல் காறித்துப்புவதும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவதுமாக நாட்களை கழித்தார். அப்படிக்கிடந்த அவருக்கு யாரோ ஒருவர் ஒரு பைபிளைக் கொண்டுவந்து கொடுத்திருக்கி றார். மற்றொன்றும் வாசிக்கக் கிடைக்காமையால் அவர் பைபிளையே மறுபடியும் மறுபடியும் வாசிக்கலானார். அதிலும் புதிய ஏற்பாட்டைப் பலதடவைப் படித்தார். அலறிப் பிதற்றிக்கொண்டிருந்த அவர் மெல்ல மெல்ல சாந்தமா னார். பைபிளை வாசிப்பதும், கண்களை மூடி தியானம் செய் வதுமாக அவரது வாழ்க்கை நகர்ந்தது. தம்மோடிருந்த பிற கைதிகளிடமும் சிறை அதிகாரிகளிடமும் அவர் அன்பாகப் பழகத் தொடங்கி னார். இது பற்றிக் கேட்டவர்களி டம், “”இயேசு என்னை முற்றிலும் மாற்றிவிட்டார்” என்றார்.

ஜேக்கப் டி. ஷேட்சரின் மனமாற்றம் பிட்ஸ்மோவை வியக்க வைத்தது. வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என சோர்ந்திருந்த அவருக்கு இது புது உற்சாகத்தை ஊட்டியது. ஒரு நாள் பிட்ஸ்மோ அந்த விமானியிடம், “ஆமாம், நான் உங்களை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்; இரண்டு மூன்று வாரம் முன்புவரை அலறியழுத நீங்கள் இப்போது எப்படிச் சாந்தமானீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு அவர், “”இயேசு என்னை மாற்றினார். அவரது அன்பு என்னை முற்றிலும் தடுத்தாட்கொண்டுள்ளது. நீங்களும் இறைவார்த்தையை வாசித்தால் அவர் உங்களை மாற்றுவார்” என்றார். எனவே பிட்ஸ்மோவும் பைபிளை வாசிக்கத் தொடங்கினார்.

மத்தேயு நற்செய்தியின் கடைசிப் பகுதியில் வருணிக்கப்பட்டுள்ள இயேசுவின் பாடுகளும் அவரது மன்னிக்கும் அன்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இதுவரை எந்த எதிரியையும் கொல்வதற்கு மட்டுமே அறிந்திருந்த பிட்ஷ்மோ, எதிரியை நேசிக்கவும் கற்றுக் கொண்டார். எனவே அவர் தமது வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தார். உலகம் முழுவதும் சென்று நற்செய்தியைப் பறைசாற்ற விரும்பினார். நம் ஆண்டவர் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சிலுவையில் கிடந்து ஜெபித்த ஜெபம் கன்னெஞ்சம் படைத்த தளபதியின் உள்ளத்தை உருக வைத்தது. அவரை நற்செய்தியின் ஊழியராகவும் மாற்றியது.

கடவுளுக்கு ஏற்புடையதுதானா?

“”எனக்கும் இந்த நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன்மூலம் நான் இந் நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை” (எசேக். 22:30). இங்கே சொல்லப்படும் “தடுப்பவன் ஒருவன்’ கடவுளுக்கும் மனிதருக்குமிடையே மத்தியஸ்தம் செய்பவனைக் குறிக் கிறது. புனித பவுல் இதனையே இன்னும் வலிலõயுறுத்திக் கூறுகிறார்: “”அனைவருக்காகவும் மன்றாடுங்கள். இறைவனிடம் வேண்டுங்கள். பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலிலõல் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப்பற் றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய் தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும் உயர்நிலையில் உள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும்” (1 திமொ. 2:1þ3).

உலகம் முழுவதற்குமாகப் பரிந்து பேசுவதற்கே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். எனவே தான் நம்மை அரச குருத்துவத்திருக்கூட்டம் என்கின்ற னர். பாவிகளைக் கடவுளோடு இணைக்கும் ஒரு பாலத்தைக் கட்டி முடிப்பதற்காகவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம்.

நிலநடுக்கத்தைத் தடுக்கும்

ஒரு தியான நிகழ்ச்சியில் சோதோம் கோமோராவின் கதையை விளக்கி பரிந்துரை ஜெபத்தின் தேவையை உணர்த்தினேன். அப்போது வயதான கன்னியாஸ்திரீ தமது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் இரவு முழுவதும் நற்கருணை எழுந்தேற்றி கேரளத்துக்காக ஜெபிப்பது எனத் தீர்மானம். ஜெபமும் ஆரம்பமானது. அன்றிரவு மடம் அமைந்திருந்த பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம்! மடத்தில் இருந்த யாருக்குமே எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதே நாள் இரவு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் ஆயிரக் கணக்கா னோர் இறந்தனர். அன்று இரவில் அதே போன்ற நிலநடுக்கம் கேரளத்தில் ஏற்பட்டிருக்குமா னால் அநேகம் நதிகளும் அணைகளும் உடைபட்டு பெருஞ்சேதம் ஏற்பட்டிருக்கும் உண்மையில் கேரளத்தை கோட்டை கட்டிக்காத்தவர்கள் இந்தக் கன்னியாஸ்திரீகளே.

புனித ஜாண் மரிய வியானியின் காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தால் ஒரு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றி வாடினர். இப்புனிதர் நடத்திவந்த ஓர் ஆதரவற்றோர் இல்லமும் பஞ்சத்திற்குத் தப்பவில்லை. சுமார் மூன்று நாட்கள் உண்ண எதுவும் கிடைக்காததால் அங்குள்ளவர்கள் மிகவும் வருந்தினர். புனித மரிய வியானி தமது ஆதரவற்ற குழந்தைகளை நோக்கி, “”வாருங்கள், நாம் உணவறைக்குச் செல்வோம்” என் றார். அப்போது அப்பிள்ளைகள், “”சுவாமி, நேற்றும் அதற்குள் போய்ப் பார்த்தோமில்லையா?” எனக் கேட்ட னர். அதற்கு அவர், “”நாம் இரவு முழுவதும் ஜெபித்தோமே, எனவே, நம்பிக்கையோடு வாருங்கள்” எனச் சொல்லிலõக் கொண்டே அறையைத் திறந்தனர். அங்கே தானியங்களும் காய் கனிகளும் மூட்டை மூட்டையாய் இருந்தன!

எவ்வளவு தூரத்திலானாலும்!

சீனாவைச் சிலõலிர்ப்பூட்டிய நற்செய்திப்பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஹேன்சன் டெய்லர். இளமையில் நாத்திகராய் இருந்த இவர் ஒருநாள் தமது தந்தையின் அறையில் இருந்த ஒரு நூலை எடுத்து வாசித்தார். அன்றிலிலõருந்து இயேசுவின் நெறிகளை அறியத் தொடங்கினார். தம்மை மறந் தார். தலைவன் தாளே தலைப்பட்டார். பத்து நாட்களுக்குப் பின் அவர் தம் தாயிடம், “நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தேன்’ என்றார். அதற்கு அவன் தாய், “”நீ உன்னை ஒரு நான்கு மணிக்குத்தானே அர்ப்பணித்தாய்” எனக்கேட்டார். அது கேட்டு ஆச்சரியப்பட்ட அவர், இவ்வளவு தொலைவில் இருந்த தம் தாயிடம் இதை எப்படி உணர்ந்தீர்கள்? எனக்கேட்டார். அதற்கு அத்தாய், “”அன்று காலை முதல் நான் உனக் காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்போது கிட்டத்தட்ட மாலை நான்கு மணிக்கு தூய ஆவியின் அபிஷேகம் என்னை ஆட்கொண்டது. இனந் தெரியாத ஒரு மகிழ்ச்சியால் நான் நிறைந்தேன். கடவுள் என்னைத் தொட்டார் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்” எனப்பதிலளித்தார்.

நமது பரிந்துரை ஜெபங்களை கடவுள் விரும்புகிறார் என்று மட்டுமல்ல; அதை நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்கவும் செய்கிறார். இயேசு தம்மிடம் நம்பிக்கை கொள்கி றவர்களுக்காகவே இறைவனை வேண்டுகிறார். ஆனால் உலகம னைத்திற்குமாக ஜெபிக்க வேண்டிய பொறுப்பை அவர் நம்மிடமே விட்டுச் சென்றுள்ளார்.

ஆகவே, நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற அனைவரையும் நமது ஜெபங்களில் நினைவுகூர்ந்து பரிந்துரை ஜெபத்தின் தூதுவர்களாய் மாறக் கடவோம்.

'

By: Dr. John D.

More
ஜன 24, 2020
ஈடுபடுங்கள் ஜன 24, 2020

அது ஒரு மருத்துவமனை. நான் அங்கே மருத்துவரைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்தேன். அப்போது கழிவறைக்குப் போகத் தோன்றியது. அங்கேயும் பலர் வரிசை பிடித்துக் காத்திருக்கின்றனர். உள்ளே போய் வருவோர் தங்கள் சேலையைத் தூக்கிய வண்ணமாய் மூக்கைப் பொத்திக்கொண்டு முகம் சுளிக்க வெளிவருவதைக் கண்டேன். அங்ஙனம் வந்தவர்களில் ஒருத்தி, “பாத்துப் போங்கோ, உள்ளே சுத்தமே கிடையாது’ எனச் சொல்லிலõலிக்கொண்டே போனாள். இதைக் கேட்ட நான் போகவேண்டாமே என நினைத்தேன். ஏனென்றால் சுகாதாரமில்லாத கழிவறைகள் என்பதை என்னால் சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை. அப்போது என் முறை வந்தது. உள்ளே போனேன். அது இந்திய முறையிலானது. சுத்தம் சுத்தமாகவே எட்டிப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. பிரதான கட்டிடத்திலõலிலிருந்து சற்றே விலகி கொஞ்சம் ஒதுக்கிடமாய் இருந்தது அக்கழிவறை. மண் தரையைத் தாண்டித்தான் உள்ளே வரவேண்டும். மழைக் காலம் வேறு. செருப்பில் அப்பிய சேற்றுடன் உள்ளே வரும்போது கழிவறை சீர்கெட அதிக நேரம் தேவைப்படாது. ஆக, கழிவறை முழுவதும் சேறும் சகதியும். நானும் ஒருவகையில் வெளியேற கதவின் கைப்பிடியைத் தொடப் போனேன். அப்போது எனக்குள் ஓர் அசரீரி கேட் டது : “”வாளியில் கொஞ்சம் தண்ணீர் பிடித்து இக்கழிவறையை நீ ஏன் கழுவக்கூடாது? இனி வருபவர்களாவது மூக்கைப் பிடிக்காமல் போகட்டுமே”. கடவுளின் குரலோடு நான் மல்லுக்கட்டினேன்.

நான் எனக்குள் சொன்னது : “”இது பொது மருத்துவமனை. புறநோயாளிகள் பலரும் வந்து செல்வது. கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியாது”. அப்போது மீண்டும் அசரீரி: நோய் எதுவும் அணுகாது. வாளி நிறைய தண்ணீர் எடுத்து பீச்சியடித்தாலே போதும். கழிவறை சுத்தமாகிவிடும். இறுதியில் நான் தோற்றுவிட இறைவன் வெற்றி பெற்றார். கடவுளின் குரல் பணித்தவாறே நான் செய்தேன். இரண்டு மூன்று தடவை தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுத்தம் செய் தேன். கழிவறை பளிச்சென்று இருந்தது. என் நெஞ்சுக்கு சற்றே நிம்மதி. அப்போது கடவுளின் வார்த்தை என் செவிகளில் முழங்கியது : “”இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக, தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது” (உரோ 14:17). இவ்வசனம் என் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. அப்போது நான் திரும்பிப் பார்த்தேன். பலர் கழிவறைக்குள் மகிழ்ச்சியாகச் சென்றுவருவதைக் கண்டபோது நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். தூய ஆவியின் சிறகடிச் சத்தம் மீண்டும் ஒரு முறை கேட்பது போல் இருந்தது. நான் இந்நாள் வரை இதைப் பற்றி யாரிடமும் கூறவில்லை.

இன்னும் பல இடங்களில் கழிவறைகளைச் சுத்தம் செய்யவைத்து பணிவின் பாடங்களைக் கடவுள் எனக்குக் கற்றுத்தந்தார். இதனால் நான் ரொம்ப பணிவுடையவர் என்றோ, எந்தக் கழிவறையையும் கழுவத் தயார் நிலையில் உள்ளவள் என்றோ யாரும் கருதிவிடக்கூடாது. கழிவறைகள் அடுப்பாங்கரைபோல் அழகாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டுமென்பதில் நான் மிகுந்த கண்டிப்பானவள். எனது அதீத சுத்தத்தால் என் பணிப்பெண்ணே என்னை விட்டுச் சென்றுவிட்டாள் என்பது வேறு கதை. இதிலிலõலிருந்து சுத்தத்தின் விஷயத்தில் நான் ரொம்பவும் கராறானவள் என்பது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். அப்படிப்பட்ட என்னைத்தான் கடவுள் பல்வேறு கழிவறைகளைக் கழுவவைத்து எளிமைப்படுத்தி இப்போது நான் இருக்கும் நிலைக்குக் கூட்டிவந்தார். அருள்வாழ்வு தியானங்களில் பங்கெடுப்பவர் களுக்காக கழிவறைகளைச் சுத்தப்படுத்திய கதைகளை சில வருடங்களுக்கு முன் ஷாலோம் டைம்சில் நான் எழுதியிருந்தேன்.

தூய ஆவியார் கற்றுத்தரும் சில பணிவின் பாடங்களோடு நாம் முழுமூச்சுடன் ஒத்துழைத் தால் மட்டுமே இறையாட்சியின் அனுபவங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். தூய ஆவியின் இறையாட்சி அனுபவத்தை பதவி சுகங்களாலோ, பணபலத்தி னாலோ, கல்வி கேள்விகளாலோ, உடல்வலிலõலிமையினாலோ நாம் அடையவே முடியாது. உண்மையாகவே அது தூய ஆவியின் கொடை. ஆம். இது ஆவியின் தூண்டுதல்களுக்கு ஆமேன் எனச் சொல்லும் அனைவருக்கும் தூய ஆவியார் அருளும் அன்புப்பரிசு. தம்மையே தாழ்த்தி பிறருக்காக கையளிக்கும் பொருட்டு தூயஆவியின் கரங்களில் யார்யாரெல்லாம் தங்களை அர்ப்பணிக்கிறார்களோ அவர்களுக்கே கடவுள் இதனை அருளுகின்றார். உண்மையில் நாம் நம்மோடு மற்போர் செய்தாலன்றி இதனை அடைய முடியாது. “”திருமுழுக்கு யோவானின் காலம் முதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர் (மத். 11:12).

நம்மோடு எதிர்த்து நிற்கின்றவர்களை நாம் பகைவர்களாகவே காண்கிறோம். ஆனால் விண்ணரசைப் பொறுத்த மட்டில் சாத்தானுக்கப்புறம் எனக்கெதிரி நான்தான். நான் என்னுடனேயே மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
எனது விருப்பங்களின் அட்டவணை யில் இடம்பெற்றுள்ள எல்லாவற்றையும் அடைந்துவிடுவதாலோ அல்லது அனைத்தையும் இறைவேண்டல் மூலம் சாதித்துவிடுவதாலோ எனக்கு விண்ணரசின் அனுபவம் கிடைத்து விடாது. மாறாக, தூய ஆவியார் வழங்கும் மகிழ்ச்சி, நீதி, சமாதா னம் போன்றவையே விண்ணரசின் அனுபவம்.

இலட்சங்களால் அடைய முடியாது

உயர் பதவியில் இருக்கும் சிலர் அன்னைத் தெரசாவின் தொண்டு நிறுவனத்தைப் பார்க்கச் சென்ற னர். ஒரு நோயாளியின் அழுகிப் புழுக்கள் நெளியும் புண்களிலிலõலிருந்து கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் புழுக்களை நோண்டியெடுக்கும் ஓர் அருட்கன்னிகையைக் கண்டபோது அவர்கள் விக்கித்துப் போயினர். அவர்களில் ஒருவர் அக்கன்னியாஸ்திரீயிடம், “”எப்படி அம்மா உங்களால் இது முடிகிறது? லட்ச ரூபாய் கொடுத்தாலும் நான் இதைச் செய்யமாட்டேன்” என் றார். அதற்கு அக்கன்னியாஸ்திரீ மறுமொழியாக, “ஒன்றல்ல பத்துலட்சம் கொடுத்தாலும் நானும் இதைச் செய்திருக்கமாட்டேன். ஆனால் இப்போது என்னால் இதைச் செய்யாதிருக்க முடியவில்லை. ஏனெனில் இயேசுவின் அன்பு இப்படிச் செய்யும்படி என்னைத் தூண்டுகிறது” என்றார்.

அது போகட்டும். அதிகம் பேசப்படாத “மிண்டா மடங் களுக்குச்’ சென்றிருக்கிறீர்களா? வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல், நான்கு சுவர்களுக்குள்ளேயே காலமெல்லாம் அடைபட்டு, தேவநற்கருணையை மட்டுமே உணவாக்கி, ஏனைய அறுசுவை உணவுகளையெல்லாம் துறந்து, ஜெபதபங்களில் தங்களைக் கரைத்துக்கொள்ளும் கன்னியாஸ்திரீகள் இளமையை மட்டுமல்ல; முதுமையைக்கூட இங்கேயே செலவிட்டு வாழ்க்கையை ரசிக்கிறார்களே! அச்சகோதரிகளை அம்மடங்களுக்குள் கட்டிப்போடும் பின்னூட்டம்தான் என்ன? இயேசுவின் சாலப்பரிந்த அன்பல் லவோ? நாமெல்லாம் போடுகின்ற தப்புக்கணக்குகளைப் போல் இவர்கள் வாழ்க்கையைப் பாழாக்குவோர் அல்ல. தூய ஆவியுடன் இணைந்து வாழ்க்கையை ரசிப்பவர்கள்.

இந்த வரத்தைப் பெற்றது எப்படி?

தெருவோரமாய் மண்ணை அளைந்து திரியும் பாதுகாப்பற்ற குழந்தைகளை வாரிப்புணர்ந்து நல்லுணவும் உடையும் அளித்து, தாலாட்டுப் பாடி உறங்க வைக் கும் மேற்படி துறவற நங்கையர்கள் ஒரு பிள்ளைப்பூச்சி பெற முடியாததால்தான் இப்படிச் செய்கி றார்கள் என எண்ணுகிறீர்களா? இல்லை. இது கிறிஸ்துவின் மாறாத அன்புக்கு இவர்களின் பதிலுரை.

மேலும், தெருவிலே திரியும் மனநலம் தப்பியவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மருந்தும் இடமும் தந்து பராமரிக்கும் கிறிஸ்துவின் ஊழியர்கள் வேறு வேலையில்லாததால் அதைச் செய்யவில்லை. கிறிஸ்துவின் நீங்காத நிலையன்பு அவர்களை அப்படிச் செய்ய வற்புறுத்துவதால்தான் செய்கிறார்கள். இங்ஙனம் எத்தனையோ பேர் கிறிஸ்துவின் அன்பி னால் தூய ஆவியின் தூண்டுதல் களுக்குக் கட்டுப்பட்டு ஆமேன் எனச் சொல்லõலிலி விண்ணரசின் சாட்சிகளாய் வலம்வருகின்றனர்!

காலம் இன்னும் முடிந்து விடவில்லை. இன்று நீங்கள் தூய ஆவியின் செயல்களோடு ஒத்துழைத்தால் உங்களுடைய வீடுகள், ஆலயங்கள், நிறுவ னங்கள் எல்லாமே இறையாட்சியின் கூடாரங்கள் ஆகிவிடும். தூய ஆவியுடன் ஒத்துழைக்க நீங்கள் தெருவில் இறங்க வேண்டியதில்லை. நம்முடைய வீட்டிலேயே, நம்முடைய இல்லாமைகளுக்கு மத்தியிலேயே நாம் இதைச் செய்யமுடியும். அதற்கு ஆமேன் என மட்டும் சொல்லுங்கள். என்னை அவர் கழிவறைகளைக் கழுவவைத்தார் என்பதற்காக உங்களையும் அங்ங னம் செய்யவைப்பார் என அஞ்சிப் பின்வாங்காதீர்கள். எனினும் இறையாட்சியின் அனுபவங்களை நாம் பெறுவதற்காக அவர் நம்மை எளிமை, வெறுமை போன்ற ஒடுங்கிய வழிகளினூடே நடத்துவார் என்பதை மட்டும் மறக்காதீர்கள். ஆதலால் நாம் நம்மையே அவருக்குப் பூரணமாய் அர்ப்பணிப்போம்.

ஆவியானவர் என்னை நடத்திடின்
அன்றாடம் விந்தை காண்கிறேன்.
ஆதலாலெந்தன் ஆவியே தேவா
போற்றுதும் நின்றன் பாதங்கள்!!


'

By: Stella Benny

More
ஜன 24, 2020
ஈடுபடுங்கள் ஜன 24, 2020

அன்று நகரமெல்லாம் ஒரே களபரம். எங்குமே விழாக்கோலம். பல சாலைகளிலும் வாகனங்களுக்குத் தடை. சற்றுநேரம் மவுனமாய் மனம் திறக்க ஆண்டவரின் கோவிலுக்குச் சென்றேன். அக்கோவில் நகரத்தின் நடுவில் இருந்தது. மனம் லேசானது உள்ளம் புன்னகைத்தது.

அப்போதுதான் நெஞ்சில் பொறி தட்டியது, இன்று வீட்டுக்குத் திரும்பிச் செல்ல ஆட்டோ கிடைக்காது என்று. உடனே அங்கிருந்து எழுந்தேன். ஆண்டவரே எப்படியாவது ஓர் ஆட்டோ கிடைக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் வேக வேகமாய் வெளியே வந்தேன். அப்போது கோவிலõலில் இருந்து வெளியே வந்த இன்னொருவர் முற்றத்தில் நிறுத்திப் போட்டிருந்த ஓர் ஆட்டோவில் ஏறி “ஸ்டார்ட்’ செய்வதைக் கவனித்தேன். வேகமாய்ச் சென்று என்னையும் கூட்டிச் செல்லலாமா என அவரைக் கேட்டேன். அவர் என்னிடம் எங்கே போக வேண்டும் எனக் கேட்க, நானும் இறங்க வேண்டிய இடத்தைச் சொன்னேன். அவரும் அவ்வழியேதான் போகவிருப்பதால் என்னையும் தமது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார்.

ஆட்டோ முன்னோக்கி நகர்ந்தது. மெல்ல பேச்சுக் கொடுத்தேன். “உங்கள் பெயர் என்ன? எங்கே போகிறீர்கள்?’ அவர் மறுமொழியாக, “என் பெயர் கிருஷ்ணன் குட்டி. இப்போது வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்’ என்றார்.

சற்றே வியப்புடன், “கிருஷ்ணன் குட்டி எங்களுடைய கோவிலõலில் இருப்பதைப் பார்த்தேன்’ என்றேன். அதற்கு அவர், “மற்றக் கடவுள்களைப் போல் அல்ல உங்கள் கடவுள்’. அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். நான் அடிக்கடி இவ்வாலயத்திற்கு வந்து ஜெபிப்பது உண்டு. அப்போதெல்லாம் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைப்பதும் உண்டு. இதுவரை என்னவெல்லாம் கேட்டிருக்கிறேனோ எல்லாவற்றையும் பெற்றிருக்கிறேன்’ என்றார். வெகு பவ்யமாக நான் மீண்டும் அவரிடம், கிருஷ்ணன்குட்டி எதாவது தியானத்திற்கு போயிருக்கிறீர்களா?’ எனக் கேட்டேன்.

அவர், “”சிறிது நாட்களுக்கு முன்தான் ஒரு தியானத்திற்குச் சென்றேன். எனக்கு ரொம்ப பிடித்துப்போன தியானம். தியானம் முடிந்து கிளம்பும் போது ஒருவர் என்னிடம், “கிருஷ்ணன் குட்டி வசனம் ஏராளமாக வாசிக்க வேண்டும்’ எனக்கூறி அனுப்பினார். நானும் வீட்டுக்கு வந்த கையோடு எங்காவது “வசனம் கிடைக்குமா என விசாரித்தேன். யாரிடமும் வசனம் இல்லை’. ஒரு பிரபலமான புத்தகக்கடையிலும் சென்று “வசனம்’ என்ற புத்தகம் இருக்கி றதா எனக் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் எங்களிடம் “வசனம்’ இல்லை என்று கையை விரித்தார்கள். இனி இந்த “வசனம்’ எங்கே கிடைக்கு மெனத் தெரியாமல் தவிக்கிறேன்” எனக் கூறி முடித்தார்.

கிருஷ்ணன் குட்டி பேசுவதை நான் ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். என் வீடு நெருங்கிக் கொண்டிருந்தது. இறங் குமிடத்தை அடைந்ததும், “”இது தான் என் வீடு. கிருஷ்ணன் குட்டி கொஞ்சம் இருங்கள்” எனச் சொல்லõலி விட்டு நான் வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டிற்குள் சென்று, புதிய ஏற்பாட்டின் ஒரு கையடக் கப் பதிப்பைக் கொண்டு வந்து கிருஷ்ணன் குட்டியிடம் கொடுத்தேன். “”நண்பா, இது தான் நீங்கள் தேடிய வசனம்” இதை விடாமல் வாசியுங்கள் எனக் கூறினேன். அவர் அதை ஆவலுடன் வாங்கி ஆட்டோவின் முன்பக்கத்திலே வைத்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன் என்றார்.

மூன்று வடிவங்கள்

இன்னொரு நாள் நான் ஒரு திருமண விருந்துக்குச் செல்வதற்காக சாலையில் ஆட்டோவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டேன். ஏறியவுடன், ஆட்டோவின் முன்பக் கத்துச் சட்டத்தில் மூன்று இறைவடிவங்களைக் கண்டேன். மூன்று வடிவங்களும் ஒரே நேர்கோட்டில், ஒரே சட்டகத்தில் இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற வடிவங்களை பல ஆட்டோக்களிலும் பேருந்துகளிலும் பார்க்க முடியும்.

ஆட்டோவை ஓட்டிய தம்பியிடம் “படங்கள் நன்றாக இருக்கின்றனவே. இவர்கள் யார் யார்?’ எனக் கேட்டேன். அந்தத் தம்பியும் மகிழ்ச்சியாக அவர்களின் பெயர்களைச் சொன்னான். அப்போது நான் அவனிடம், “தம்பி, இயேசுவை விடப் பெரியவர் இதுவரை உலகில் பிறக்கவில்லை’ என்றேன். மேலும், இயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்ற அனைத்தையும் நான் அவனுக்கு எடுத்துரைத்தேன். அவனும் மிகுந்த பொறுமையுடன் கவனமாகக் கேட்டான். நான் இறங் குமிடம் வந்தது. அங்குள்ள ஓர் ஆலய மண்டபத்தில்தான் திருமண விருந்து. ஆட்டோவை நிறுத்தி கீழே இறங்கினேன். மறுபடியும் பார்க்கும்போது மீதியைப் பேசுவதாகச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

விருந்து முடிந்தது. மீண்டும் வீட்டுக்குச் செல்ல ஓர் ஆட்டோவுக்காகக் காத்திருந்தேன். ஆட்டோ ஒன்று வந்தது. கைகாட்டி அதில் ஏறினேன். பார்த்தால் நான் வந்த அதே ஆட்டோ. அதே தம்பி, அதே கடவுள்கள். இதுதான் “தெய்வ நிச்சயம்’ என்றான் அத்தம்பி. எங்கே முடித்தோமோ அதிலிலõருந்து மறுபடியும் ஆரம்பித்தோம். அவன் என் பேச்சுக்குக் கவனமுடன் செவிகொடுத்தான். என் இடமும் வந்தது. அப்போது என் மனம் சொல்லõலியது ; உண்மைதான் ; கடவுள் ஏராளம் வாய்ப்புகள் அளிக்கிறார்…!

'

By: Dominic

More
ஜன 24, 2020
ஈடுபடுங்கள் ஜன 24, 2020

2010 செவிலிலõயர் படிப்பை முடித்துவிட்டு வேலைக் காக அலைந்து திரிந்த காலம். சவுதி நாட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிந்தேன். வேலைக்குச் சேர வேண்டும் என்ற அவசரத்தில், கடவுளிடம் கூட ஆலோசனை கேட்காமல் சவுதிக்குச் செல்ல ஆயத்தமானேன். ஆனால் என் பெற்றோர் அதற்கு அனுமதி தரவில்லை. அவர்களது எதிர்ப்பையும் மீதி சவுதிக்குச் செல்லத் தயாரானேன்.

சவுதிக்குச் செல்வதற்கு நான் காட்டிய அவசரத்தை பலரும் எதிர்த்த படியால் நானும் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன் எதற்கும் ஒரு குருவானவரிடம் சென்று யோசனை கேட்கலாம் என நினைத்து பங்குத் தந்தையிடம் சென்றேன். அவர் எனக்காக இறைவேண்டல் செய்தார். பிறகு என்னைப் பார்த்து, “”மகனே, நீ ஒர் அறையில் தன்னந்தனியாக இருந்து அழுவதைக் கடவுள் எனக்குச் சுட்டிக்காட்டுகிறார்” என்றார். ஆனால் நான் அவருடைய ஆரூட தரிசனங்களையும் பொருட்படுத்தவில்லை.

நான் எப்போது சவுதிக்குச் செல்லத் திட்டமிட்டேனோ அப்போதிலிலõருந்தே என் வாழ்க் கையில் ஏராளமான சங்கடங் கள் இடையீடுகளாக வரத் தொடங்கின. தொட்டதெல்லாம் துலங்காமற்போயின. மாதங்கள் சில சென்ற பின்னும் விசா வந்தபாடில்லை. கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு தான் “”விசா” கிடைத்தது. இப்படி, ஒரு வழியாக சவுதி நாட்டை அடைந்த போது தான் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னவர்களின் மோசடி புரியவந்தது. சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் “”நர்சிங் விசா” எடுத்துச் சென்ற என்னை அவர்கள் பந்தைப் போல உருட்டி விளையாடினர்.

நிலையான ஒரு தங்குமிடம் எனக்குத் தரவில்லை. இன்று ஓரிடம், நாளை இன்னோ ரிடம் என மாறி மாறித் தங்க வைத்தனர். பல நாட்கள் வேலை இல்லை. அறையில் வெட்டியாக உட்கார்ந்திருந்தேன். என்னை வேலைக்குச் சேர்ப்பதாக வாக்களித்த மருத்துவமனையின் கட்டுமா னப்பணிகள் அப்போதுதான் நடந்து கொண்டிருந்தன. உண்மையில் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். சூழ்ச்சிகள் ஏமாற்றுகள், மோசடிகள் போன்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களை நேரடியாக உணரும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். கடைசியில் நானே அவர்களுக்கு சுமையாகி விட்டேன் ஒருவழியாக என்னை பையன்களின் அறையில் அவர்கள் தங்கவைத்தனர்.

ஏழு பையன்கள் அவ்வறையில் இருந்தனர். அன்று வரை நான் கேள்விப் படாத அருவருப்பான காரியங் களை அந்நாட்களில் கண் ணெதிரே கண்டேன். கேலிலõக் கிண்டல்கள், கும்மாளக்கூத்துகள். அழிச்சாட்டியங்கள் என அனைத்துமே அச்சிறு அறையில் அரங்கேறின. வேண் டாப் பெண்டாட்டி கைதொட்டாலும் குற்றம், கால் வைத்தாலும் குற்றம் என்னும் பழமொழி எழுத்துப் பிசகாமல் நிறைவேறுவதை என் வாழ்க்கையில் கண்டேன். ஆனாலும் நான் எல்லாவற்றையும் பொறுமையாக சகித்தேன். வாழ்க்கையை உந்திஉருட்ட வேண்டிய கட்டாயத்தில் நான் எல்லாம் மறந்து அவர்களோடு இருந் தேன். நான் தங்கும் அறையும், உண்ணும் உணவும் எல்லாமே அவர்களின் ஈவு. எனவே நான் அவர்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டியது கட்டாயம். கடவுளிடம் வேண்டுவது ஒன்றே என் ஒரே ஆறுதல். வேலை வாங்கித் தருவதாக் கூறியவர்கள் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தனர். என் விஷயத்தில் அவர்கள் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. என் உணவுக்கான பணத்தைக்கூட அவர்கள் தரவில்லை. அறையை விட்டு வெளியே தலை காட்டுவதற்கான “இக்காமா’ அட்டையைக்கூட எனக்கு அவர்கள் தரவில்லை. என் வாழ்க்கை கண்ணீரின் பாதாளத்திலே அமிழ்ந்து போனது. ஒவ்வொரு நாளும் நான் நானாக இல்லை, வேறு யாராகவோ மாறிக்கொண்டிருந் தேன். புறாக்களின் கேவுதல் போன்ற என் கூக்குரல் கடவுளின் அரியணையை முற்றுகையிட்டது. ஏராளமான ஜெபமாலைகள்; யூþடிþயூப் வழியிலான வசன சொற்பொழிவுகள் போன்றவை எனக்கு சற்றே வருடலாக இருந்தன. ஜெபத்திலே முழுகி னாலும் உள்ளம் கவலையில் கரைந்து கொண்டே இருந்தது. எவ்வளவு தான் பசித்தாலும் பையன்களின் மதுபான கேளிக்கைகள் முடியாமல் உணவு கிடைக்காது. நள்ளிரவு தாண்டினாலும் இது தான் வாடிக்கை.

ஒரு நாள் என் அறையில் உள்ளவர்கள் வெளியே ஒரு விருந்து உபசரணைக்காகச் சென்றிருந்தனர். திரும்பி வரும் போது எனக்கான உணவைக் கொண்டு வருவதாகவும் எனவே சமைக்க வேண்டாமென்றும் சொல்லõலிச் சென்றனர். இரவு நெடுநேரமான பின்னும் அவர்கள் வரக்காணாமையால் நான் தளர்ந்து போனேன். பசி என் உச்சந் தலையை முட்டியது. அடுக்களையில் ஏதேனும் சமைக்கலாமா என்று பார்த்தால் பயம். அன்று நான் சுண்டப்பசியோடு படுத்துவிட்டேன். உறக்கத்தின் இடையில் பசி வாட்டியதால் எழுந்துவிட்டேன்.

பசித்த ராத்திரி
என் வாழ்க்கையில் அப்படி

'

By: Shalom Tidings

More
ஜன 24, 2020
ஈடுபடுங்கள் ஜன 24, 2020

ஷாலோம் திருவிழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய நான் மேடையை விட்டுக் கீழிறங்கி வந்தேன். அப்போது என் எதிரே வந்த ஒரு சகோதரி என்னிடம் இரக்கத்தின் இவ்வாண்டில் நீங்கள் நல்லகாரியமாக எவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? எனக் கேட்டார். நான் அவருக்கு மறுமொழியாக, “”இரக்கத்தைத் தியானிக்கிறேன். அதைக் குறித்து உரையாற்றுகிறேன், அதைப்பற்றி ஏராளம் எழுதுகிறேன், அந்த இரக்கத்தின் வழியில் வாழ முற்படுகின்றேன்” என்றேன். அதற்கு அச்சகோதரி, “இதை எல்லாரும் தான் செய்வர், நமக்கென்று வித்தியாசமான எதையேனும் செய்யக் கூடாதா?’ என மீண்டும் கேட்டார். நான் சற்று பம்மியும் பதுங்கியும் ஏதேதோ சொல்லிலõக் கொண்டிருந்தேன். உடனே அவர் என்னிடம் “நீங்கள் உங்கள் அதிகப்படியான நேரத்தை எங்கே செலவிடுகிறீர்கள்? எனக் கேட்க, நான் மறுமொழியாக, “விமான நிலையத்தில் தான் அதிகமான நேரத்தைச் செலவிடுகிறேன் என்றேன்.

அப்படியானால் ஏன் நீங்கள் விமான நிலையத்தில் பாவசங்கீர்த்தனம் கொடுக்கக் கூடாது? எனக் கேட்டார். அங்கு வந்துபோகும் பயணிகள் பலரும் கோவிலுக்கு வராதவர்கள் அல்லவா? அப்படிப்பட்டவர்களுக்கு உங்களின் சேவை மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்காதா? எனக் கூடுதலாகவும் சொன்னார்.

இங்கு பாவசங்கீர்த்தனம் கிடைக்கும்

அன்று ஒரு மாலைப் பொழுது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான் அந்த விமான நிலையத்தில் வெட்டியாக இருந்தாக வேண்டும். எனவே ஒரு குவளை தேனீர் அருந்திய கையோடு அனைவரும் பார்க்க முடிந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்தேன். ஏற்கெனவே எழுதி மறைவாக வைத்திருந்த ஒரு சிறிய பதாகையை எடுத்து ஒரு சின்ன குச்சியில் தொங்கவிட்டேன். அதில் ஸ்ரீர்ய்ச்ங்ள்ள்ண்ர்ய் அஸ்ஹண்ப்ஹக்ஷப்ங் (பாவசங்கீர்த்தனம் கிடைக்கும்) என எழுதப்பட்டிருந்தது. கையில் ஒரு ஜெபமாலையுடன் அமர்ந்திருந்தேன் சுமார் அரைமணி நேரமாகியும் யாருமே இந்தப்பக்கம் எட்டிப் பார்த்ததாகத் தெரியவில்லை. தப்பித்தவறி என்னைக் கவனித்தவர்கள் ஒருவழி யாகக் கடந்து போயினர். கொஞ்சம் கழித்து காவல்துறையினர் மூன்று பேர் என்னருகே வந்தனர். சீருடையில் வந்த அவர்களைப் பார்த்ததும் சற்று பதற்றமாகத்தான் இருந்தது. அவர்கள் என்னிடம், “ஐயா, இங்கே விற்பனை செய்ய அனுமதியில்லை’ என்று கராறாகக் கூறிவிட்டனர். நானும், “விற்பனைக்கு என்னிடம் எதுவும் கிடையாது. நான் யார் என்றுதான் இதிலே எழுதி வைத்திருக்கிறேன். என்னை நானாக மாற்றுவதே இதுதான்’ என்றேன். அவர்களும் “ஆகட்டும்’ எனச் சொல்லிலõவிட்டு நகர்ந்துபோயினர். எங்கே சவால்கள் உண்டோ அங்கேதான் நற்செய்தி நல்ல விளைச்சலை அள்ளித்தரும்.

நான் ஏறெடுத்துப் பார்க்கையில் ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி பக்கத்திலே ஒரு கடையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு முன்னால் குவிந்திருக்கும் புட்டிகளை நான் ஓரக்கண்ணால் எண்ணினேன். ஏதோ ஒரு குழப்பம் இருப்பதாகத் தெரிந்தது. அல்லாவிடில் இந்தக் காலம்காத்தாலேயே வந்து இப்படி அள்ளிப்பருகியிருக்க மாட்டாள்! நோய்வாய்ப்பட்டவர்களுக் கல்லவோ மருத்துவர் தேவை. நான் அவளுக்காக ஜெபித்தேன். அவளும் சீக்கிரமாக எழுந்து என்னை நோக்கி நடந்தாள். வந்ததும் வராததுமாக என் காலிலõல் விழுந்தாள். நான் சற்று அதிர்ந்தேன். அவளுக்குப் பருத்த உடம்பு. அவள் என்னிடம், “பாவசங்கீர்த்தனம் வேண்டும் சுவாமி’ என்றாள். அது முடிந்ததும் அவள் தன் உள்ளக்கிடக்கையைத் திறந்தாள்.

இரண்டாவது கணவனும் அவளை ஏமாற்றிவிட்ட ஆத்திரத்தில் அவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டாள். முதல் கணவனுக்குப் பிறந்த மூத்த மகன் அதற்குத் தேவையான துப்பாக்கியை அவளிடம் கொடுத்திருந்தான். ஒரு பல்கலைக்கழகத்துறைத் தலைவராக வேலைபார்த்த அவளுடைய வங்கி முதலீடு முழுவதையும் அவன் அபகரித்துக் கபளீகரம் பண்ணிவிட்டான். அவனுடைய சொகுசு வாழ்க்கையைக் குறித்து இவளது மகன் அடிக்கடி எச்சரித்த பின்னும் இவள் செவிக் கொள்ளவில்லை. இறுதியில், அவன் இன்னொரு பெண்ணுடன் சுற்றுவதாகவும் அறிந்தாள். அப்போதே இவள் மனம் தளர்ந்தாள். ஏமாற்றமும் வெறுப்பும் பழிவாங்க வேண்டுமென்ற ஆவேசமும் இவளுக்குள் பொங்கி வழிந்தன. ஆகவே அவனைக் கொன்று தன் கவலையைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தாள். புண்பட்ட மனத்தை ஓரளவு தேற்றுவதற்காகவே மதுவுக்கும் அடிமையானாள். ஆனால் இப்பாவசங்கீர்த்தனம் இவளுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.

அவள் எனக்கு நன்றிகூறி நடந்துசென்றாள். கடவுளின் கருணை கோவிலுக்குள் என்பதை விட கோவிலுக்கு வெளியேதான் மிகுதியாக வெளிப்பட வேண்டும் என அப்போது எனக்குத் தோன்றியது. கோவிலுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்திற்கும் கீழே தான் இருக்கிறது. சொல்லப் போனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இனியெல்லாம் தெருக்களில்தான் நற்செய்தி அறிவிக்க வேண்டும். அலுவலகங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கல்வி நிலையங்கள், கருணை இல்லங் கள் போன்ற இடங்களே இனிமேலும் நற்செய்தி முழக்கத்திற்கான முச்சந் திகள். “”நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும். நீ படுத்திருக்கும்பேது அவை உன்னை காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னிடம் உரையாடும்” (நீமொ. 6:22) என்னும் இறைவார்த்தையை நாம் இணைத்து வாசிக்க வேண்டும்.

ஆண்டவரின் பணியாளர்கள் சோர்வடையக்கூடாது. இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாய் இருந்த பெலிலõஸ்தியனான கோலõலியாத்தை ஞாபகம் இருக்கிறதா? அவனோடு மோதும் துணிச்சல் யாருக்கும் இல்லை. யாராலும் அதற்கு முடியவும் இல்லை. ஆனால் அது தாவீது என்ற ஆடுமேய்ப்பன் வரும் வரை தான். ஆனால் பாருங்கள், தாவீது வரும் வரை பெலிஸ்தியன் என்ன செய்கிறான் என்று! அவன் தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக சவால் விட்டுக் கொண்டே இருந்தான். இதிலிலõருந்து, அலகை தன் கடமைகளை நாள்தவறாமல் ஒழுங்காகச் செய்கிறது எனப் புரிகிறதல்லவா? அவனுக்கு ஓய்வேது, உறக்கமேது? இங்ஙனம் விடுப்பே இல்லாமல் பகைவன் மிடுக்காகப் போரிடும்போது ஆண்டவருடைய ஊழியர்கள் ஏன் விடுப்பில் செல்ல வேண்டும்? இதனால்தான் திருத்தந்தை பிரான்சிஸ் குருக்களிடம் கூறும்போது, “”குருத்துவம் இடகாலங் களுக்கு உட்பட்டதல்ல; அது ஒரு பதவியும் அல்ல; ஆனால் குருக்கள் எல்லாக் காலத்திலும் இறைமக்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.

நாற்பது நாள்கள் ஒரு பெலிலõலிஸ்தியன் இறைமக்களை இடைவிடாமல் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போது ஆண்டவரின் அருட்பொழிவு பெற்ற மன்னனும் மன்னனின் படைவீரர்களும் எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கி றார்கள். அவர்கள் ஒன்றுகூடி புதுப்புது வழிகளை ஆராயவோ இறைவேண்டலிலõல் முழுகவோ செய்யாமல் வாளாவிருக்கின்ற னர். அறுசுவை உணவுண்டு, வேலைக் கார பரிவாரங்களின் குற்றேவல் கொண்டு, நாற்காலிலõகளையே முற் றாகப் பற்றிக் கொண்டிருக்கின்ற னர். பகைவன் பதற்றமே இல்லாமல் படையெடுத்து வரும்போது, கடவுளின் ஊழியர்கள் தொடை நடுங்கிப் பின்வாங்குகின்றனர். பெலிலõலிஸ்திய னான கோலிலõலியாத்து தன் ஆசானுக்கு முற்றிலும் கட்டுப்படுகிறான். ஆனால் இறைமக்களோ அவ்வப்போதுதான் தங்கள் ஆசானை நினைத்துப் பார்க்கின்றனர். உண்மையில் இது ஒரு பகுதிநேர வேலை அல்ல; இதுவே நம் வாழ்வு. இரவும் பகலும் அப்படியே

'

By: Rev Dr Roy Paalaatty

More